மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியிலிருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் முள்ளிச்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நேசராசா (வயது 56) என்பவர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்தவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரும், அவருடைய நண்பரும் நேற்று இரவு வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்திலுள்ள வாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர், மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் உயிரிழந்த நபரை தாக்கிய நிலையில் தான் அங்கிருந்து தப்பியோடி காட்டில் ஒளிந்திருந்ததையடுத்து இன்று காலை அங்கிருந்து வெளியேறியதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டாருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
#SrilankaNews