courts
செய்திகள்இலங்கை

மன்னார் மணல் அகழ்வு – வழக்கு 29ஆம் திகதி!

Share

மன்னார் அருவியாறு பகுதியில் மணல் அகழ்வதற்கும் தடை விதிக்குமாறு கோரி மன்னார் நீதிவான் சிவகுமார் முன்னிலையில் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட எதிர்த்தரப்புகளை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் தருமாறு உத்தரவிட்டது.

ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி இன்று மன்னார் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேசவன் சயந்தன். கிராய்வா ஆகியோர் சகிதம் முன்னிலையாகி இந்த வழக்கை சமர்ப்பித்தனர்.

அருவியாறு பரிகாறக்கண்டல் ஆத்திமோட்டை. பன்னவெட்டுவான் அடியாச்சிக்குளம் பகுதியில் வகை தொகையின்றி மணல் அகலப்படுவதாக பிரதேச சபைத் தலைவர் தி.பரஞ்சோதி நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கமத்தொழில் திணைக்களம் இந்த ஆற்றுப்படுக்கையில் மணல் அள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளது என அறிகிறோம்.

புவிசரிதவியல். அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகம் மணல் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதி கூட கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. ஆனால் அதன் பின்னரும் மணல் அள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் பெரும் சூழலியல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வழக்காளிகள் தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

விடயத்தை பரிசீலித்த நீதிவான் எதிராளிகளை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...