மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்

01 HIV AIDS

மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடல் வழியாக சட்ட விரோதமாக இந்தியா சென்று வருவோர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களினால் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

சுகாதார துறையினர் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 1987 தொடக்கம் இதுவரை 11 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Exit mobile version