LakshmanKiriella
செய்திகள்அரசியல்இலங்கை

சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவரே மங்கள! – லக்‌ஷ்மன் கிரியல்ல

Share

” மங்கள சமரவீர மனித உரிமைகளை மதித்தவர். சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் அமரர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்தான் அவர் இவ்வாறு கூறினார்.

” மங்கள சமரவீர அரசியலில் புரட்சி செய்தவர். 1989 ஆம் ஆண்டு தாய்மார் முன்னணியை உருவாக்கினார். காணாமல்போனவர்கள் பட்டியலை தயாரித்தார். அந்த பட்டியலையே தற்போதைய பிரதமர் அன்று ஜெனிவாவுக்கு எடுத்துச்சென்றார். எனினும், அவர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.

மங்கள சமரவீர சிறுபான்மையின மக்களுக்கு நேசக்கரம் நீட்டியவர். நீதியின் பக்கம் நின்றவர். அதனால்தான் அவர் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் எமது நாட்டுக்கு ஆதரவு கிட்டியது.

பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மங்கள அறிவித்தபோது நாம் வியப்படைந்தோம். ஆனால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பை ஆரம்பித்தார். அவர் எப்போதும் தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்டவர்.” – என்றார் கிரியல்ல.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...