WhatsApp Image 2022 01 26 at 1.22.24 PM 1
செய்திகள்அரசியல்இலங்கை

‘வாழ்வதற்கு வழிவிடு’ – ஹட்டனில் துண்டுப் பிரசுர விநியோகம்

Share

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் வலியுறுத்தி ஹட்டன் நகரில் இன்று (26) துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ஜே.வி.பியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான அகில இலங்கை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் பிரேமரத்ன, உப செயலாளர் செல்வி ஆகியோரின் பங்குபற்றலுடன், ‘வாழ்வதற்கு வழிவிடு’ என எனும் தலைப்பின்கீழ் மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

” அரிசி, தேங்காய், பால்மா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளனன. இதனால் மக்களுக்கு வாழ்க்கைச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் முறையற்ற உரக் கொள்கையால் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பால் எல்லா பொருட்ளின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன.

எனவே, பொருட்களின் விலைகளை குறைத்து, பெருந்தோட்ட மக்களுக்கு உரிய வகையில் சம்பளத்தை பெற்றுக்கொடுத்து , வாழ்வதற்கு வழிவிடு.” என துண்டு பிரசுரம் ஊடாக, ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

WhatsApp Image 2022 01 26 at 1.22.24 PM WhatsApp Image 2022 01 26 at 1.22.25 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...