மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் - வைத்தியர் ஆலோசனை
செய்திகள்இலங்கை

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

Share

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அதிகமாக கீரை வகைகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனாவுக்கென குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லாத நிலையில் மக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை, மக்களின் உள ஆரோக்கியத்தை பாதிக்க கூடும் என்பதால், அனைவரும் மூன்று வேளை உணவுகளையும் தவறாது உண்ண வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான விட்டமின் சி  மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. நாளொன்றுக்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிட வேண்டும். புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அன்றாட வாழ்வில் பால், பழவகைகள், தானிய வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...