WhatsApp Image 2026 01 06 at 20.24.06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் பாரிய வெடிபொருள் சேகரிப்பு மீட்பு: வயல் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி குண்டுகள்!

Share

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பகுதியில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சக்திவாய்ந்த வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் (STF) நேற்று (06) மீட்டுள்ளனர்.

38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் இதன்போது மீட்கப்பட்டன.

இப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர், தனது வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியுள்ளார். இதன்போது நிலத்தின் அடியில் மர்மப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அவர் உடனடியாக வாகரை விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப் படையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தின் போது இவை இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...