mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்தவுக்கு போதிய அனுபவம் இல்லை! – பங்காளிக்கட்சி விளாசல்

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேமீது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டால் விவசாயத்துறை அமைச்சரை விவசாயிகள், விளாசித்தள்ளிவருவதுடன், அவருக்கு எதிராக இன்றளவிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியொன்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளமை அமைச்சருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

” விவசாயத்துறை அமைச்சருக்கு விவசாயம் பற்றி போதிய அனுபவம் இல்லை. இரசாயன உரத்துக்கு ஒரேடியாக தடை விதிப்பதைவிட, கட்டம்கட்டாக அதற்கான பணியை செய்திருக்க வேண்டும். தற்போது முழு அரசாங்கத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” – என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...