இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணிகளின் ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ளார்.
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
IPL கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வரும் மஹேல ஜயவர்தன, அத்தொடர் நிறைவடைந்தவுடன் இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதி முதல் 23ம் திகதி வரை மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளார்.
Leave a comment