Sweden
செய்திகள்உலகம்

மீண்டும் பிரதமராகிய மெக்தலினா ஆன்டர்சன்!

Share

சுவீடனின் முதல் பெண் பிரதமராகிய மெக்தலினா ஆன்டர்சன் பதவியைத் துறந்த அடுத்த வாரமே மீண்டும் பிரதமராகியுள்ளார்.

சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந் திகதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் சுவீடனின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பதவி விலக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அதாவது கூட்டணி ஆட்சியை அமைக்க அவரது கட்சிக்கு வழங்கிய ஆதரவை கிரீன்ஸ் கட்சி திடீரென திரும்பப்பெற்றது.

அதனால் அந்த நாட்டின் அரசியல் சாசன நடைமுறைப்படி கூட்டணிக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும். எனவேதான் பிரதமர் மெக்தலினா தனது பதவி உடனடியாக துறந்தார்.

இந்த நிலையில் சுவீடனின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக பாராளுமன்றம் நேற்று கூடிய நிலையில் பிரதமருக்குரிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் பல எம்.பி.க்கள் மெக்தலினாவை பிரதமராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இதை தொடர்ந்து அவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு அவரது புதிய மந்திரி சபை இன்று பதவி ஏற்கவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...