கம்பஹாவில் இளைஞர் சுட்டுப் படுகொலை!

gun shot 1200 1

கம்பஹாவில் இன்று காலை, இளைஞர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சலூன் ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கிதாரி, குறித்த இளைஞரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் மாத்திரம் 24 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் .கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே அதிகளவான சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

#SriLankaNews

Exit mobile version