tamilni 197 scaled
இலங்கைசெய்திகள்

விமானப்படையில் யாழ் இளைஞர்கள்

Share

விமானப்படையில் யாழ் இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டுமென சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி நிகழ்வுக்கு யாழ் மக்களால் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நேற்றைய தினம் மாத்திரம் இந்த கண்காட்சிக்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயம். இங்குள்ள மக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டும். ” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...