தப்பியோடிய இளைஞர் சடலமாக மீட்பு!

Death body907

யாழ்ப்பாணம் ஏழாலை சிவகுரு வீதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

இந்தப் பகுதியில் போதை வியாபாரம் நடைபெற்றது. தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்துக்கு வருகை தந்தபோது அங்கிலிருந்து தப்பியோடிய இளைஞன் மதில் மீது ஏறி பாய்ந்தபோது கிணற்றில் தவறி வீழ்ந்து இறந்துள்ளார் என்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version