குடும்ப சுமையால் கனவை தொலைத்த வீராங்கனை
இலங்கைசெய்திகள்

குடும்ப சுமையால் கனவை தொலைத்த வீராங்கனை

Share

குடும்ப சுமையால் கனவை தொலைத்த வீராங்கனை

தடையூன்றி பாய்தல் என்ற போல்வால்ட் (paul vault) போட்டியில் தேசிய சாதனைகளை படைத்த இலங்கையின் தலைசிறந்த தடகள வீராங்கனை ஒருவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் நாணய நெருக்கடி காரணமாக உயர்ந்து வரும் மருத்துவ கட்டணங்கள், நீண்ட கால நோய் பராமரிப்பு தேவைப்படும் தனது தாயை கவனிப்பதில் பிரச்சினையை கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் 24 வயதான சச்சினி பெரேரா தனது தடகள கனவுகளை நிறுத்தி வைத்தார்.

இதனையடுத்து அவர் துபாய்க்கு சென்று பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

எனினும் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவை சச்சினி பெரேரா தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் “இதுதான் எனது உலகம் என்று நான் உணர்கிறேன்” எனவும் ஆங்கில நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“நீ ஒரு விளையாட்டு வீராங்கனை, வீட்டு வேலைக்காரி அல்ல” என்று தனது பெற்றோர் அடிக்கடி கூறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தனது பயிற்சியாளரால் அனுப்பப்படும் வாராந்த வலிமை பயிற்சி அட்டவணையை தற்போது பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகங்களினால் இந்த தகவல் வெளியானதையடுத்து சச்சினி பெரேராவின் நிலைமை கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் சச்சினிக்கு அரபு இராச்சியத்தில் விளையாட்டு தொடர்பான வேலையைத் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி அலெக்ஸி குணசேகர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...