குடும்ப சுமையால் கனவை தொலைத்த வீராங்கனை
இலங்கைசெய்திகள்

குடும்ப சுமையால் கனவை தொலைத்த வீராங்கனை

Share

குடும்ப சுமையால் கனவை தொலைத்த வீராங்கனை

தடையூன்றி பாய்தல் என்ற போல்வால்ட் (paul vault) போட்டியில் தேசிய சாதனைகளை படைத்த இலங்கையின் தலைசிறந்த தடகள வீராங்கனை ஒருவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் நாணய நெருக்கடி காரணமாக உயர்ந்து வரும் மருத்துவ கட்டணங்கள், நீண்ட கால நோய் பராமரிப்பு தேவைப்படும் தனது தாயை கவனிப்பதில் பிரச்சினையை கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் 24 வயதான சச்சினி பெரேரா தனது தடகள கனவுகளை நிறுத்தி வைத்தார்.

இதனையடுத்து அவர் துபாய்க்கு சென்று பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

எனினும் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவை சச்சினி பெரேரா தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் “இதுதான் எனது உலகம் என்று நான் உணர்கிறேன்” எனவும் ஆங்கில நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“நீ ஒரு விளையாட்டு வீராங்கனை, வீட்டு வேலைக்காரி அல்ல” என்று தனது பெற்றோர் அடிக்கடி கூறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தனது பயிற்சியாளரால் அனுப்பப்படும் வாராந்த வலிமை பயிற்சி அட்டவணையை தற்போது பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகங்களினால் இந்த தகவல் வெளியானதையடுத்து சச்சினி பெரேராவின் நிலைமை கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் சச்சினிக்கு அரபு இராச்சியத்தில் விளையாட்டு தொடர்பான வேலையைத் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி அலெக்ஸி குணசேகர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...