police 2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

Share

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கொலை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு 50 மீற்றர் தூரத்தில் நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியின் ஓரத்தில் மயங்கி வீழ்ந்து கிடந்துள்ள நிலையில் அவரை மீட்டு தெல்லிப்பழை மருத்துமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அவரது உறவினர்கள் பொலிஸாரை கோரியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...