police 2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

Share

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கொலை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு 50 மீற்றர் தூரத்தில் நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியின் ஓரத்தில் மயங்கி வீழ்ந்து கிடந்துள்ள நிலையில் அவரை மீட்டு தெல்லிப்பழை மருத்துமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அவரது உறவினர்கள் பொலிஸாரை கோரியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...