இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

Share
police 2
Share

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கொலை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு 50 மீற்றர் தூரத்தில் நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியின் ஓரத்தில் மயங்கி வீழ்ந்து கிடந்துள்ள நிலையில் அவரை மீட்டு தெல்லிப்பழை மருத்துமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அவரது உறவினர்கள் பொலிஸாரை கோரியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...