இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மணக்கோலத்தில் இளம் ஜோடி கைது!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
Share

மணக்கோலத்தில் இருந்த இளம் ஜோடி, இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்குலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, இந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

மொரட்டுவ, சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் வைத்து, 15 வயதான மணப்பெண்ணும் 19 வயதான மணமகனும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் காதலுக்கு சிறுமியின் பாட்டனார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, காதலனுடன் தப்பிச் சென்ற சிறுமி, மக்கொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, உறவினர்கள் ஒன்று கூடி திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...