Sritharan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது!! – விஜயதாசவுக்கு சவால் விட்ட சிறிதரன் எம்பி

Share

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே எமது தலைவர் என்றும்  வாழ்நாள் முழுவதும் அவரை நாம் மறக்கப்  போவதில்லை என்றும் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், உங்களாலும் பிரபாகரனை  மறக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும்,  நீதியமைச்சர் விஜேதாஸவை பார்த்து நீங்கள் இனவாதத்தை விதைப்பவர் என்றும் நீங்கள் ஓர் இனவாதி எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  கூறுகையில்,

நீங்கள் தற்போதும் பிரபாகரனை மறக்கவில்லை, நாங்களும் மறக்கப் போவதில்லை. வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டோம் எங்கள் தலைவர் பிரபாகரன்தான், அவர் நேர்மையான கண்ணியமான தலைவர் என்று குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் பிரபாகரனை விமர்சிக்காதீர்கள், படித்தவர்கள், போல் உரையாற்றுங்கள் முட்டாள் போல் பேச வேண்டாம் , நீங்கள் இனவாதத்தை விதைப்பவர். நீங்கள் ஓர் இனவாதி” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...