MC Yasmin Pigou 3 e1593715808979 scaled
இலங்கைசெய்திகள்

தற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது – யஸ்மின் சூக்கா விசனம்

Share

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துவரும் தற்போதைய அரசாங்கம், மாத்தளை மனிதப்புதைகுழிகள் மற்றும் இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற படுகொலைகளில் கோட்டாபயவின் வகிபாகத்துக்காக அவரைப் பொறுப்புக்கூறச்செய்யாது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனிதப்புதைகுழிகள் குறித்தும், அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன்போது ஏற்பட்ட தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின்Nhபது முன்னாள் பாதுகாப்புச்செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையைத் தயாரிப்பதில் முன்னின்று செயற்பட்ட அமைப்பான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் அதுசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகள் தொடர்பான அறிக்கையானது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் மற்றும் அதற்கு முன்னர் மாத்தளை மாவட்டத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பி படுகொலைகள் என்பன தொடர்பில் தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு தொடர்வது பற்றித் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அப்போதிருந்து கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது ஜே.வி.பி கால படுகொலைகள் மற்றும் இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற படுகொலைகளுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளோ இன்னமும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அவ்வரசாங்கம் மாத்தளை படுகொலைகளிலோ அல்லது கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது இடம்பெற்ற படுகொலைகளிலோ கோட்டாபய ராஜபக்ஷவின் வகிபாகத்துக்காக அவரைப் பொறுப்புக்கூறச்செய்யாது என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...