பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி
இலங்கைசெய்திகள்

பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி

Share

பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி

திருகோணமலையில் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டி 01.08.2023 நடைபெற்றுள்ளது.

TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாரான மாணவர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்தி சென்றுள்ளனர்.

பதினாறு வயதுக்கு கீழ்பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்குபற்றியதுடன் 13 கிலோமீட்டர் தூரத்தை 5 மணித்தியாலங்களில் நீந்தியுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் ஆறு சிறார்கள் 13 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்ததும், சிம்மர் என்ற சிறுவன் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...