santhiya
இலங்கைசெய்திகள்

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் – சந்தியா தெரிவு

Share

2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரசியல், அறிவியல், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கி, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட புலனாய்வு ஊடகவியலாளரும் மற்றும் கேலிச்சித்திர கலைஞருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்.

இலங்கையில் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட பணிகளுக்காக அவர் பல பாராட்டுக்களைப் பெற்றதுடன், மனித உரிமைகளுக்காகஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பல அறிக்கைகளை சந்தியா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...