கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த முதல் செய்தி வெளியானதும், ‘கோல்டன் ஜெல்’ என்ற பொருளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என பலரும் கூறியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்திலுள்ள 24 வயதுடைய பெண்ணின் கைகளுக்கு இது எவ்வாறு வந்ததென ஆராயப்பட்டது.

இந்த நிலையில் சில கடத்தல்காரர்கள் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்புபட்டு மோசடியான முறையில் இவற்றினை கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் மூலம் நாட்டுக்கு வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் உதவுகிறார்கள் என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமை என கூறப்படுகின்றது.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் பெரிய அளவில் சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்களை எடுத்துச் செல்வார்களா என்பதை பாதுகாப்புப் படையினர் ஆர்வத்துடன் சரிபார்க்கும் அரிதான சந்தர்ப்பங்களும் உள்ளன.

அதற்கமைய, இந்த ஊழியர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தங்க ஜெல் கரைசல் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அவர் ஒழுங்கற்ற முறையில் நடப்பதாக சிசிடிவி கண்காணிப்பில் காட்டிய சந்தேகத்தின் அடிப்படையில், இந்த பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜெல் கரைசல் அடங்கிய 4 பொட்டலங்கள் மேலதிக விசாரணைக்காக தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தங்க ஜெல் குறித்து விசாரணை நடத்தும் போது, ​​தற்போது கடத்தல்காரர்கள் தங்கத்தை ஜெல் வடிவில் தயாரித்து சட்டவிரோதமாக கடத்துவதாக தெரியவந்துள்ளது.

ஜெல்லை மீண்டும் தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...