30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

Share

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா என்ற பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

வீட்டின் நெருக்கடி உட்பட பல கனவுகளுடன் அவர் வெளிநாடு சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி விடுவதாக அவர் தனது கணவரிடம் கூறியிருந்தார்.

எனினும் அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காதமையினால் அவரது கணவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் இலங்கைக்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையிடம் மேற்கொண்ட விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, ​​ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா 2 பொதிகளுடன் வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் புறப்பட்டுச் சென்றமை தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்தனர்.

விசாரணையின் போது, ​​தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண் சென்றதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வின் போது எந்தப் பெண்களும் இல்லை என்று குடியிருப்பாளர்கள் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...