10 1
இலங்கைசெய்திகள்

164 பேரை ஏமாற்றி பெண் செய்த பாரிய மோசடி அம்பலம்! சிக்கிய பல தொழிலதிபர்கள்

Share

தொழில் அதிபர்கள் உட்பட பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலவசப் காணிப் பத்திரங்களை வழங்குவதாக சுமார் 100 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டில் 164 வணிக உரிமையாளர்களை நிதி மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பக்கமுன, மகரகம பகுதிகளை சேர்ந்த சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

உருமய இலவசப் காணி பத்திரத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வழங்குவதாக கூறி 164 பேரை ஏமாற்றியும் , பின்னர் ஒரு வழக்கறிஞராக நடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் 600,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண் கல்முனையைச் சேர்ந்த சுமார் 50 தொழிலதிபர்களை அரசியல் பற்றி விவாதிக்க சிறிகொத்தா தலைமையகம் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகளுக்கு வரவழைத்து, இலவசப் பத்திரங்களை வழங்குவதாக கூறி, அவர்களையும் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...