20 1
இலங்கைசெய்திகள்

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் – பொலிஸார் தகவல்

Share

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் – பொலிஸார் தகவல்

தலங்கம, தலஹேன பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியைக் கொன்று 5 நாட்களாக சடலத்தை மறைத்துவைத்த கணவனும், சந்தேகநபரான நண்பரும், நேற்று அதிகாலை தலங்கம பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கணவனும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிக அடிமையாகியிருந்த அவரது நண்பரும், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் அவரைக் கொன்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தாருகா நதி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் தலங்கம, தலஹேன பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மனைவி, கணவர் மற்றும் அவர்களது குழந்தையுடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபரின் கணவர் 7-8 வருடங்களாக நண்பர் ஒருவருடன் பழகியுள்ளார், அவர் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவராகும்.

கடந்த 6 ஆம் திகதி கணவர் தனது நண்பருடன் வீட்டில் ஐஸ் போதை பொருள் பருகிக் கொண்டிருந்த போது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

பின்னர் கணவரின் நண்பர் மனைவியை கத்தியால் தலையில் அடித்து கொன்று உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்தனர்.

நேற்று அதிகாலை இருவரும் தலங்கம பொலிஸில் சரணடைந்ததுடன் பெண்ணை தாங்களே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...