செய்திகள்அரசியல்இலங்கை

‘அகலம் இன்னும் அதிகம்’ – மாவீரர் நினைவேந்தல் குறித்து மனோ!

Share
mano
Share

“அகலம் இன்னும் அதிகம்” என்பதை நேற்றையதினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நேற்றையதினம் யாழ். சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ள சென்ற சட்டத்தரணி சுபாஷ் தலைமையிலான குழுவினரை துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் இடைமறித்து அச்சுறுத்தினர். இந்த நிலையில் அங்கு சென்றவர்கள் அவர்கள் இடைமறித்த பகுதியிலேயே துப்பாக்கி முனைக்கு நேராக அவ்வித அச்சமுமின்றி மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

“ஆயுத போராட்டத்தை மீள ஆரம்பிக்க அல்ல என தெரிந்த நிலையிலும், இதே நினைவுகூரல் உரிமைகள் சிங்கள தெற்கிற்கு வழங்கப்பட்ட நிலையிலும், மரணித்தோரை நினைவுறுத்தும் உலகளாவிய உரிமை அடிப்படையில் நிகழும் நினைவுகூரல்களை சகித்துக்கொள்ள முடியாமை, இத்தனை காலம் கடந்தும், இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி வெகு அகலமாகத்தான் இன்னமும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...