செய்திகள்இலங்கை

விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத அரசு நாட்டுக்கு எதற்கு? – சஜித் கேள்வி

Share
sajith 2
Share

நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி எகிறிச் செல்கின்றன. ஆனால் அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை என அரசாங்கம் காரணங்களை கூறி வருகின்றது. அவ்வாறாயின், நாட்டுக்கு அரசாங்கம் எதற்கு?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் குறைந்தபட்சம், நாட்டின் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக்கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது.

நாட்டு மக்கள், எதிர்கொள்ளும் விலைவாசி உட்பட இக்கட்டான நிலைமைகளில் இருந்து, அவர்களை மீட்பதற்கான திறன் அரசிடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விளக்க வேண்டும்.

உண்மையை ஒப்புக்கொண்டு நாட்டை மக்களை பாதுகாப்பதுடன், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் நாட்டில் தடுக்கப்பட்டுள்ளன. மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். அத்துடன் நாட்டில் போஷாக்கு குறைபாடும் அதிகரித்து வருகின்றது. – என்றார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...