நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று மாலை தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.
அதற்கு முன்னர் டலஸ், சஜித்துடன் கூட்டமைப்பினர் பேச்சு நடத்தியுள்ளனர். அது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின்னர் டலஸை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment