21 10
இலங்கைசெய்திகள்

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Share

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இன்று சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, திருகோணமலை,மன்னார்,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...

articles2FBeZFwQ6t4jz5lsonfdUc
செய்திகள்இலங்கை

நுவரெலியா வெள்ளம்: 21 வெளிநாட்டவர்கள் விமானப்படையின் MI-17 ஹெலிகொப்டர் மூலம் துரிதமாக மீட்பு!

நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் (Severe Floods) இடம்பெயர்ந்து சிக்கித் தவித்த 21 வெளிநாட்டவர்கள்,...

articles2FWdcbeAlRn6LMdiTyRA63
செய்திகள்இலங்கை

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை  முறைமைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை (e-invoice) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை...

images 9
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் அல்லலுறும் யானைகள்: உணவின்றி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரில்...