20221013 102306 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கு அபிவிருத்தியில் சகல ஒத்துழைப்பும் வழங்குவோம்

Share

எமது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களின் போதும் வடபகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாங்கள் எம்மாலான சகல ஒத்துழைப்பினையும் வழங்கி வருகிறோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே ரமேஸ் பத்திரண இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்களின் மிகவும் முக்கியமான வாழ்வாதார கைத்தொழிலாக பனைசார் உற்பத்தி பொருட்கள் காணப்படுகின்றன.

வடக்கில் 12 ஆயிரம் குடும்பங்கள் பனை சார்ந்த கைத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். குறித்த பனை சார் உற்பத்தினை நம்பி வாழ்ந்து வரும் குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை இந்த அரசாங்கத்தில் முன்னெடுத்து வருகின்றோம்.

பனை அபிவிருத்தி சபையினை முன்னோக்கி நகர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதாவது நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருப்பதை முன்னேற்றுவதற்கு சில திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம். அத்தோடு பனங்கள்ளு உற்பத்தியினை மேம்படுத்தி அதில் பெறும் வருமானத்தினை எடுத்து சபையினை முன்னேற்றவுள்ளோம்.

பனைசார் உற்பத்தி மற்றும் பணங்கள்ளுக்கு இலங்கையில் மாத்திரமல்ல உலக நாடுகள் அனைத்திலும் கேள்வி அதிகமாக காணப்படுகின்றது.நான் அமைச்சராக பதவியேற்ற பின் நான்கு தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பனை சார் உற்பத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன்.பனை அபிவிருத்தி சபையினை நிதி ரீதியிலே முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பனை சார் உற்பத்தி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியமாகும்.

குறித்த கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தியடையாத நிலையில் கீழ்த்தளம் மாத்திரம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் இரண்டாம் தளம் விரைவில் கட்டி முடிக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...