gl7
இலங்கைசெய்திகள்

சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கோம்! – பீரிஸ் திட்டவட்டம்

Share

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக விசாரணை மூலமே தீர்க்கப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயார் இல்லை.

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். இலங்கையின் தனித்துவங்களை பாதுகாத்து இறையாண்மை நோக்கி பயணிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்ளும்.

உள்நாட்டு பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை.

வெளிநாட்டு பொறிமுறை எமது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது. அத்துடன் எமது அரசியல் கட்டமைப்புக்கு எதிரானதுமாகும்.

வேறு நாடுகளில் பிரச்சினைகள் பல உள்ள நிலையில் எமது நாட்டின் மீது உள்ள பார்வையில் எந்த அடிப்படைக் காரணமும் இல்லை.

மேலும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...