gl7
இலங்கைசெய்திகள்

சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கோம்! – பீரிஸ் திட்டவட்டம்

Share

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக விசாரணை மூலமே தீர்க்கப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயார் இல்லை.

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். இலங்கையின் தனித்துவங்களை பாதுகாத்து இறையாண்மை நோக்கி பயணிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்ளும்.

உள்நாட்டு பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை.

வெளிநாட்டு பொறிமுறை எமது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது. அத்துடன் எமது அரசியல் கட்டமைப்புக்கு எதிரானதுமாகும்.

வேறு நாடுகளில் பிரச்சினைகள் பல உள்ள நிலையில் எமது நாட்டின் மீது உள்ள பார்வையில் எந்த அடிப்படைக் காரணமும் இல்லை.

மேலும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...