Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தல் வரும்போது எமது பலம் தெரியும்! – சஜித்துக்கு ஜோன்ஸ்டன் சவால்

Share

” இந்த அரசு பாஸா, பெயிலா என்பது தேர்தல் வரும்போது தெரியவரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீரும். அவை தற்காலிகமானவை. முடிந்தால் எரிபொருள் இறக்குமதி செய்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். – இவ்வாறு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” ஐக்கிய மக்கள் சக்திக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்குவதற்கு மூன்று நாடுகள் தயார் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அவர் கூறுவது உண்மையெனில், அந்நாடுகளுடன் பேச்சு நடத்தி முதலில் எரிபொருளை கொண்டுவரட்டும். அப்போது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரிக்கும். இதோ, கோத்தாவால் முடியாததை சஜித் செய்துவிட்டார் என மக்கள் பாராட்டுவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் அவர் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் அவர் தலைமையிலான ஆட்சி எப்போது வரும் என தெரியாது. அதுமட்டுமல்ல இப்பிரச்சினைகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்வை கண்டுவிடுவோம். வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்படும். எனவே, முடிந்தால் எரிபொருளை வரவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் ஒளியவில்லை. மக்களுடன்தான் இருக்கின்றோம். தேர்தலொன்று வரும்போது அரசின் பலம் தெரியவரும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...