“நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம், நாம் பார்வையை இழந்து விட்டோம் ” என்று பாகிஸ்தானின் முன்னணி கண் வைத்தியர் நியாஸ் ப்ரோஹி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவின் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இலங்கை கண் தான சங்கத்திற்கு எழுதப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ப்ரோஹி,
உலகின் பல்வேறு நாடுகளுக்கு இலங்கை 83,200 விழிவெண்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளன.
இலங்கையின் நன்கொடைகளில் 40 சதவீத்தை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டுள்ளது. அதாவது 1967 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 35,000 விழிவெண்படலங்களை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானே இலங்கையிடமிருந்து கண்தானம் பெறுவதில் முதலிடத்தில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews