WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் அழைப்புக்கு வாலாட்டும் கூட்டம் நாங்கள் அல்லர் – ஜே.வி.பி சீற்றம்

Share

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க,மேற்படி அறிவிப்பை கட்சியின் சார்பில் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அமைச்சர்களின் இராஜினாமா என்பது அரசியல் நாடகமாகும். இரவு 12 மணிக்கு பதவி துறந்தவர்கள் மறுநாள் பகல் 12 மணிக்கு மீண்டும் அமைச்சர்களாகின்றனர். இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அதுமட்டுமல்ல பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க அமைச்சு பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமைச்சு பதவிக்கு போட்டி நிலவவில்லை என்பதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும்.

கோட்டாவின் அரசில் வாலாட்டும் கூட்டங்கள் இருக்கலாம். அந்த கூட்டம் அமைச்சு பதவிக்கு கட்டுப்படலாம். நாம் அவ்வாறானவர்கள் அல்லர். எனவே, கோட்டாவின் அழைப்பை நிராகரிக்கின்றோம். கோட்டா அரசு பதவி விலக வேண்டும். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...

25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்

நாமல் ராஜபக்ஷ: தனக்கும் SLPP உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேவையில்லை – சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்க முடிவு!

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனக்கும் தனது சக SLPP...

images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...