WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் அழைப்புக்கு வாலாட்டும் கூட்டம் நாங்கள் அல்லர் – ஜே.வி.பி சீற்றம்

Share

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க,மேற்படி அறிவிப்பை கட்சியின் சார்பில் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அமைச்சர்களின் இராஜினாமா என்பது அரசியல் நாடகமாகும். இரவு 12 மணிக்கு பதவி துறந்தவர்கள் மறுநாள் பகல் 12 மணிக்கு மீண்டும் அமைச்சர்களாகின்றனர். இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அதுமட்டுமல்ல பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க அமைச்சு பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமைச்சு பதவிக்கு போட்டி நிலவவில்லை என்பதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும்.

கோட்டாவின் அரசில் வாலாட்டும் கூட்டங்கள் இருக்கலாம். அந்த கூட்டம் அமைச்சு பதவிக்கு கட்டுப்படலாம். நாம் அவ்வாறானவர்கள் அல்லர். எனவே, கோட்டாவின் அழைப்பை நிராகரிக்கின்றோம். கோட்டா அரசு பதவி விலக வேண்டும். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...