1526823888
இலங்கைசெய்திகள்

நீர் மட்ட உயர்வு! – நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

Share

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளில் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும் தலா மூன்று அகழிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதோடு, அந்தமட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு மணிநேர மின்வெட்டு காலம் அறிவிக்கப்பட்டாலும் மின்வெட்டு இன்றி 24 மணி நேர மின்விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...