11 28
இலங்கைசெய்திகள்

Wi-Fi பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

Wi-Fi பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான இடங்களில் Wi-Fi ஐ பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எனவே, பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தி இணைய வேலைகளை செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“இலவச Wi-Fi ஐ சேவையின் மூலம் தமது இணைய சாதனங்களில் ஊடுருவி கடவுச்சொற்கள் மற்றும் பிற இரகசிய தகவல்களை திருடும் மோசடி இடம்பெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது மின்னஞ்சல் முகவரிகளை அணுகி எந்த நேரத்திலும் கணக்கியல் பணியையும் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் WhatsApp கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...