24 66149742daffa
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அழகாக முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கையில் அழகாக முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் (Consumer Affairs Authority) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப்பொருட்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (08) நடத்தப்பட்ட விசாரணையில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஜயந்தி விஜேதுங்க, சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் எரசிங்க, அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளான சதுர ஹேரத், இரேஸ் ஹேமந்த மற்றும் டி.டி.ஏ பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலானோர் தங்களை அழகுப்படுத்த இவ்வாறான பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில், சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து அவதானம் செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...

7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்...

8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக...