w720 p16x9 2022 01 25T203739Z 982850873 RC2K6S9UCWTU RTRMADP 3 USA IMMIGRATION FLORIDA
இலங்கைசெய்திகள்

வங்கக்கடலில் தாழமுக்கம்! – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Share

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இன்று (20) வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிய இருந்து கறைந்த காற்றழுத்த தாழ் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் மத்திய பகுதிகளில் காணப்படுகின்றது.

இது மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்தும் நகர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுக்க தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது

இதனால் நெட்டாங்கு 5 தொடக்கம் 20 பாகையிலும் அதநான்னு 80 தொடக்கம் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடல்பகுதிகளில் காற்றின் வேகம் வலுத்து 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை காற்று வீசும்.

இக்கடல் பிரதேசங்களில் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீற்றர்வரை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றதுடன் கடற்பரப்பின் மேல் மழையே அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடல் பரப்புக்களில் கடல் அலையின் வீதம் 2 தொடக்கம் 3 மீற்றர்வரையில் காணப்படும்.

எனவே காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்கு மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேற்குறிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறித்தப்படுகின்றார்கள். இது தொடர்பாக வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்பட்ட எதிர்கால முன்னறிவிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தென் மேற்கு வங்காள விரிகுடாவிலும் அதன் ஒட்டிய வங்காள விரிகுடாவிலும் உருவாகி இருக்கின்ற தாழ் அமுக்கம் காரணமா நாட்டின் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ் அப் போது மணித்திலாயத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்ய கூடும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான கால நிலை காணக்கூடும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...