24 661a005fcca31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

Share

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் (Sri Lanka Economy) ஸ்திரத்தன்மை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படவுள்ள திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் முன்னைய நிதியை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரிகளை உயர்த்தியுள்ளதுடன் சில மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் மீட்புக் கடனை இலங்கை பெற்றுள்ளது.

ஆனால், அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிக்கன நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடும்.

மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது வாய்ப்புகளையும் பாதிக்கலாம் என்றும் ஆசிய வங்கி எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...