4f41c436 b341 4f15 b4ef f1f904a39766
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வன்முறைக் கும்பல் அட்டகாசம்! – குடும்பஸ்தர் படுகாயம்

Share

வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று, குறித்த வீட்டின் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ரதீஸ்குமார் (வயது 41) என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த வீட்டினுள் நுழைந்த கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதேவேளை, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் போன்றவற்றையும் அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளது.

மேலும், வீட்டில் இருந்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்து சென்றுள்ளதுடன், பெண்களையும் வளைக்கட்டி அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

f2f609b7 4db4 45dc 8253 0bb76407b4cd dc1e4c12 3e1d 4a3b a562 6f2ee93ccf11 546aa675 d32d 4bb0 8e97 ec700ed51735 7baa9cc9 3009 485e ba8e 3531a6098957

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...