10 12
இலங்கைசெய்திகள்

ஜெனீவாவை தவிர்க்க கூடிய அன்றைய ஜே.வி.பியின் தீர்மானம்..!

Share

ஜே.வி.பியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா செல்ல தேவையிருந்திருக்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழத்துக்கான இறுதி போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த ஒரு வாரத்தில் போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜே.வி.பியின் சார்பில் நாம் கோரினோம்.

அந்த தேசிய ஆணைக்குழு அமைத்து அதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா தீர்மானம் வந்திருக்காது. யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் நிடைவடைந்த நிலையில் நாங்கள் ஆட்சியை கைப்பற்றும் வரை அவை நடைபெற்றிருக்கவில்லை.

அதனால் உண்மை ஆணைக்குழு மற்றும் புனரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, குறித்த ஆணைக்குழுக்கள் மூலம் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

இவற்றை நாம் மேற்கொள்வது ஜெனீவாவுக்கு காண்பிப்பதற்காகவல்ல. பல வருடங்களாக அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் மனித உரிமைகளை பாதுகாப்பது எமது கடமையாகும்.

அத்தோடு அனைத்து இனங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்பில் எமக்கிருக்கும் பற்றுதலாகும். எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது, நீதியின் ஆதிபத்தியத்தை நிலைநாட்டுதல் மற்றும் சாமாதானத்தை ஏற்படுத்தி, நாட்டி இனி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை முற்றாக ஒழிப்பது உங்களினதும் எங்களினதும் பொறுப்பாகும். எங்களால் மட்டும் இதை செய்யமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...