11
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் : அனுர குமார

Share

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் : அனுர குமார

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்றையதினம் (31) ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது கூறியுள்ளார்.

மேலும், எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கப்பட்டாலும், வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களை மட்டுமே மையப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையே தேசிய மக்கள் சக்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதோடு, அதிக வாக்குகளைப் பெற்று தமது கட்சி நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் இடம்பெறாது என்றும் ரணிலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலேயே இடம்பெறும் என்றும் அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...