மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொது சந்தைத்தொகுதியொன்றுக்குள் நேற்று (10) அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீரிகம பகுதியிலுள்ள பொதுச் சந்தை கட்டிடத்தொகுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்த இருவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய முகுருகம்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#srilankaNews
Leave a comment