24 66306a0f2d765
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து தமது கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்த காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பல அமைச்சர்கள் தொடர்ந்தும் 12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பயன்படுத்தி வருவதாக சபாநாயகர் முன்னதாக குறிப்பிட்டிருந்ததாக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...