13 19
இலங்கைசெய்திகள்

இலங்கை வழியாக வாகன இறக்குமதி மோசடி: கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

Share

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சொகுசு சிற்றாந்து வர்த்தகர், ஒருவர் குஜராத்தில் சுங்க வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், உயர் ரக வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததில் ஈடுபட்டிருந்த நிலையில், இலங்கையின் மதிப்பில் மொத்தம் 300 கோடி ரூபாய் சுங்க வரியை ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பசாரத் கான் என்ற இந்த வர்த்தகர், பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு சிற்றூந்துகளை, போலியான விலைப்பட்டியல்கள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி குறைத்து மதிப்பிட்டு வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

ஆரம்ப விசாரணைகளின்படி, உயர் ரக சிற்றூந்துகள், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவை துபாய் அல்லது இலங்கை வழியாக எடுத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், சிற்றூந்துகள் இந்திய வீதி தரநிலைகளுக்கு இணங்க இடது கை ஓட்டத்தில் இருந்து வலது கை ஓட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

பின்னர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குறித்த வாகனங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் கான், குறைந்தது 30 உயர் ரக வாகனங்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, ரோல்ஸ் ரோய்ஸ், காடிலாக் எஸ்கலேட், ஹம்மர் இவி, லிங்கன் நேவிகேட்டர், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் லெக்ஸஸ் உள்ளிட்ட நாட்டின் சில அரிய வாகனங்களும் அவரின் இறக்குமதிகளில் அடங்கியுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...