tamilni 111 scaled
இலங்கைசெய்திகள்

தொடரும் தனியார் வாகன இறக்குமதி தடை

Share

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கை அரசாங்கம் தனியார் மோட்டார் வாகன இறக்குமதி தடையை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய இயந்திர திறன் கொண்ட வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன.

எனினும், இலங்கை அரசாங்கம் பொருளாதார விவேகத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ள நிலையில், நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அவசர முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, நாட்டின் கையிருப்பு மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு, உறுதியான ஆரோக்கிய நிலையை அடையும் போது மட்டுமே வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...