tamilni 111 scaled
இலங்கைசெய்திகள்

தொடரும் தனியார் வாகன இறக்குமதி தடை

Share

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கை அரசாங்கம் தனியார் மோட்டார் வாகன இறக்குமதி தடையை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய இயந்திர திறன் கொண்ட வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன.

எனினும், இலங்கை அரசாங்கம் பொருளாதார விவேகத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ள நிலையில், நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அவசர முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, நாட்டின் கையிருப்பு மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு, உறுதியான ஆரோக்கிய நிலையை அடையும் போது மட்டுமே வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...