24 66b75c2b28b39
இலங்கைசெய்திகள்

நல்லூரில் வீதித்தடைகளை மீறி உள்நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்

Share

நல்லூரில் வீதித்தடைகளை மீறி உள்நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்

யாழ். நல்லூர் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆலய வீதிகளில் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டும் தடைவிதிக்கப்பட்டும் காணப்படுகிறது.

இந்நிலையில், வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பிக்குகளின் வாகனம் நுழைய அனுமதிக்கப்பட்டமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

மேலும், பொது மக்களின் வாகனங்களை பொலிஸார் திருப்பி அனுப்புகின்ற நிலையில், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை குற்றச்சாட்டுகளை தோற்றுவித்துள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...