tamilnih 43 scaled
இலங்கைசெய்திகள்

முருங்கைக்காயின் விலை 3000 ரூபா

Share

சந்தையில் முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வாறு முருங்கைக்காயின் விலை அதிவேகமாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, முருங்கைக்காய் ஒரு கிலோ கிராமின் மொத்த சந்தை விலை 2,500 ரூபாவாக காணப்படுகின்றது.

சந்தைகளில் மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு வேகமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பெய்த கடும் மழையின் தாக்கம் காரணமாக விவசாய செய்கை நிலங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மரக்கறிச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும், போஞ்சி, கரட், முட்டை கோவா உள்ளிட்ட மேலும் பல மரக்கறிகளும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஒரு சில இடங்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடான நிலையும் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...

mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...