ஜெனிவா பிரேரணை! – நாட்டை காப்பாற்றியோருக்கு அநீதி என்கிறார் வீரவன்ஸ

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், ஐம்பதிற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் சர்வதேச நாடுகளில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாக்கும் விதமாக அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காது போனால் இந்த நாட்டை காப்பாற்ற முன்வந்த இராணுவ வீரர்களுக்கு அநியாயம் நிகழும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

#srilankanews

Exit mobile version